- அரசு பள்ளி ஆண்டுவிழா
- குஜிலியம்பாளையம்
- பல்லநாதம் பஞ்சாயத் யூனியன் மத்திய பள்ளி
- தலைமை ஆசிரியர்
- முருகன்
- அரசாங்க பள்ளி ஆண்டு கொண்டாட்டம்
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே பல்லாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நேற்று நடந்நது. தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து தேச தலைவர்கள் பற்றியும், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசினர். பராம்பரிய கலையான தேவராட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் ஆடி அசத்தினர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, பாட்டு மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செந்தில்குமரன், சின்னப்பர் ஆசிரியைகள் புஷ்பவள்ளி, மகாலெட்சுமி, சுதா, சுபாஷினி, சுமதி ஆகியோர் செய்திருந்தனர்.
The post குஜிலியம்பாறை அருகே அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.